தூய ஜோசப் வாஸ் செபிக்கின்ற மனிதராக, செப வீரராக வாழ்ந்தார். சிறுவயது முதலே செபிப்பதில் ஆர்வம் கொண்ட தூய ஜோசப் வாஸ் ஆலயத்திக்கு செல்கிறபோதும் பள்ளிக்கூடம் செல்கிறபோதும் செபமாலை செபித்துக்கொண்டே செல்வார். சில நேரங்களில் இவர் ஊரில் இருக்கும் ஆலயத்தில் உள்ள நற்கருணை ஆண்டவரிடம் செபிக்கச் செல்கிறபோது ஆலயத்தின் கதவுகள் தானாகவே திறக்கும் என்று இவருடைய வாழ்க்கைக் குறிப்பு நமக்கு எடுத்துக்கூறுகின்றது.
இவர் குருவாக திருநிலைப்பட்ட பிறகும்கூட நற்கருணை ஆண்டவர்மீதும் அன்னை மரியாவின்மீது ஆழமான பற்றுகொண்டு வாழ்ந்தார். நீண்ட நேரம் அவர்களிடம் செபித்தார். அந்த செபம்தான் அவரை பல இக்கட்டான சூழ்நிலைகளிலிருந்து காப்பாற்றியது.