மன்னார் ஆயர்அன்பியப் பணியாளர்களின் பிரதிநிதிகளைச் சந்தித்தார்

(செய்தியாளா்:திரு.டொ.பி.பெ. ஞானப்பிரகாசம்) மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் இன்று ( 10.01.2018) புதன் கிழமை மன்னார் மறைமாவட்ட அன்பியத் தொடர் பகத்திற்குச் சென்று மறைமாவட்டப் பங்குகளிலிருந்து வந்திருந்த  அன்பியப் பணியாளர்களின் பிரதிநிதிகளைச் சந்தித்தார். முதன் முதலாக அன்பியத் தொடர்பத்திற்கு வருகை தந்த ஆயர் தந்தை அவர்களை அன்பியப் பணியாளர்கள் மன்னார் வைத்தியசாலை – விளையாட்டு மைதான பிரதான வீதியில் வைத்து வரவேற்றனர்.இவ்வேளையில் மன்னார் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்பணி. அ.விக்ரர் சோசை,அன்பியப் பணி மறைமாவட்ட இயக்குனர் அருட்பணி. ஆரோக்கியம், சாந்திபுரம் பங்குத் தந்தை அருட்பணி.யூட் ஞானறாஜ் குரூஸ் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.

இறுதியில் ஆயர் அவர்களின் ஆசியுரையுடனும், ஒன்று கூடலுடனும் நிகழ்வுகள் அனைத்தும் நிறைவுற்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *