33 வருடங்களுக்கு முன்னார் வங்காலை தூய ஆனாள் ஆலயப் பங்கில் பங்குப் பணியாளராகச் சேவையாற்றியபோது இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளார் மற்றும் அவருடன் கொல்லப்பட்ட எனைய 10 பொதுமக்கள் ஆகியோருக்கான அஞ்சலி நிகழ்வுகள் இன்று காலை வங்காலையில் இடம் பெற்றன.
காலையில் நடைபெற்ற இரக்கல் நினைவுத் திருப்பலியைத் தொடர்ந்து, அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளாரின் உருவச் சிலைக்கு வங்காலைப் பங்குப் பணியாளர் அருட்பணி.சீ.ஜெயபாலன் அடிகளார் மலர் மாலை அணிவித்தார். அதனைத் தொடர்ந்து அஞ்சலிக் கூட்டமும், உரைகளும் இடம் பெற்றன.1000ற்கும் மேற்பட்ட மக்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து 100ற்கும் அதிகமான பொதுமக்கள் குருதி நன்கொடை வழங்கினர். வங்காலப் பங்கு மக்கள் இந்நாளை எப்பொழுதும் ஒரு சோக நாளகவே கடைப்பிடித்து வருகின்றனர். இந் நாளில் தங்களுடைய தொழில்கள் அனைத்தையும் நிறுத்தி, அஞ்சலி நாளாகக் கடைப்பிடித்து வருகின்றனர்.