டிலாசால் அருட்சகோதரர்களினால் நடாத்தப்படும் லா சால் ( La Salle Kid’s Campus) முன்பள்ளி சிறார்களின் ஒளிவிழா 05.12.2017 வெள்ளிக்கிழமை மாலை 02.00 மணிக்கு மன்னார் நகர மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. ஏறத்தாழ 150ற்கும் மேற்பட்ட இம் முன்பள்ளியில் கல்வி பயிலும் சிறார்கள் இந் நிகழ்வில் தமது கலை பண்பாட்டுத் திறமைகளை வெளிக் கொணர்ந்தனர்.
லா சால் முன்பள்ளியின் இயக்குனர் அருட் சகோதரர் யோகன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பெருந்தொகையான பெற்றோர் மற்றம் நலன் விரும்பிகள் எனப் பலரும் கலந்த சிறப்பித்தனர். இவ்விழாவில் டிலா சால் அருட்சகோதரர்களும், மன்னார் திருக்குடும்ப முன்பள்ளி அதிபர் அருட்சகோதரி கிறிஸ்ரின் அவர்களும் விழாவிற்கான விருந்தினர்களாக வருகை தந்திருந்தனர். இம் முன்பள்ளியின் ஆசிரியர்கள் மிகவும் அர்ப்பணிப்போடு அனைத்துக் குழந்தைகளையும் அவர்களின் ஆற்றலை சிறப்பாக பிரசன்னப்படுத்தும் விதத்தில் பயிற்சிகளை வழங்கியிருந்தனர்.