புனித அந்திரேயா

புனித அந்திரேயா

திருத்தூதர்

அந்ரேயா என்ற சொல்லுக்கு “வீர மனிதன்” என்பது பொருள் இவர் பேதுருவின் அண்ணன் மீனவர். கலிலேயாக் கடற்கரையோரம் இவரது தொழில் ஈடுபட்டிருந்தார். ஏற்கெனவே திருமுழுக்கு யோவானின் சீடராக இருந்தவர். இயேசுவை அவர் மெசியா என்று கட்டிக்காட்டியவுடன் தம் தம்பியையும் அழைத்துக் கொண்டு போய் இவர் இயேசுவின் சீடரானார். இரு முறை கிரேக்கர்கள் இயேசுவைப் பார்த்துப் பேச வேண்டும் என்று பிலிப்புவிடம் கேட்டபொழுது, பிலிப்பு அந்திரேயாவிடம் இதைத் தெரிவிக்கின்றார் (யோவா : 40 – 42).

இவர் இயேசுவின் விண்ணேற்புக்குப் பின் துருக்கிக்குச் சென்று அவர்களிடமும், சித்தியர்களிடமும் மறைபரப்புப் பணியில் இறங்கினார். பைசான்சியம் நகருக்கப் புனித ஸ்டாக்கிஸ் என்பவரை இவர் முதல் ஆயராகத் திரு நிலைப்படுத்தினார். பின்னர் மாசிடோனியா, கிரீஸ் நோக்கிச் சென்றார். நீரோவின் கொடுங்கோல் ஆட்சியில் பத்ராஸ் என்ற ஊரில் தம் 60ம் ஆண்டு இதே நாளில் ஓ வடிவில் அமைந்த சிலுவையில் அறையப்பட்டு மறைசாட்சி முடிபெற்றார். இந்தவிதமான சிலுவை அவருக்கு மிகுந்த வேதனை கnhடுக்கும் என்று இவ்வாறு செய்தான். இவ்வாறு அறையப் பட்டிருந்த நிலையி லேயே, இவர் இரண்டு நாட்களுக்கு மக்களுக்குப் போதித்திருக்கிறார்.

இவரது உடல் கொன்ஸ்டான்டி நோபிளுக்குக் கொண்டு வரப்பட்டது. திமோத்தேயு, லூக்கா இவர்களுக்கு அருகில் அடக்கம் பண்ணப்பட்டார். கி.பி. 1210ல் சிலுவைப் போரில் ஈடுபட்ட கிறிஸ்தவப் போர்வீரர்கள், புகிதருடைய திருப்பண்டங்களைத் தென் இத்தாலியில் அமால்ஃபி என்ற நகரில் இன்றுவரை புனிதமாக வைத்துள்ளனர். இவர் ர~;யா, போலந்து நாடுகளுக்குப் பாதுகாவலர். இவர் கொலைக் களத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டபோது, தொலைவிலேயே தமக்கு காத்திருந்த புனித சிலுவையை அடயாளங்கண்டு கொண்டு, “எனக்காகத் தயாரிக்கப்பெற்ற உன்னைப் பல காலமாக எதிர்நோக்கி வாழ்ந்தேன். மகிழ்ச்சி ஆரவாரத்துடனும், நம்பிக்கையு டனும் உன்னை நெருங்கி வருகிறேன். இதற்கு முன் என் ஆண்டவரை நீ சுமந்தாய். மகிழ்சியுடன் என்னையும் ஏற்றுக்கொள்” என்றாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *