புனித பேதுரு, பவுல் பேராலய அர்ச்சிப்பு
உரோமையில் முதன் முதலாகப் புனித பேதுருவின் கல்லறையின் மேல், வத்திக்கான் குன்றின் அடிவாரத் தில் எழுதப்பட்ட சிற்றாலயம் 83ம் ஆண்டில் பாப்பு புனித அனாக்ளீட்டஸ் என்பரால் கட்டப்பட்டது. இங்குதான் புனிதரின் திருப்பண்டங்கள் புனிதமாக வைக்கப்பட்டுள் ளன. நாளடைவில் மாமன்னன் கொன்ஸ்டான்டைன் மிகப்பெரிய பேராலயம் ஒன்றை இதே இடத்தில் நிறு வினார். 16வது நூற்றாண்டில் உலகப்புகழ் மைக்கிள் ஆஞ்சலோவின் யுத்தியின்படி இப்போது காட்சியளிக்கும் பேராலயம் எழுதப்பட்டது. 50,000 பேர்களுக்கு இடமளிக்க கூடிய இப்பேராலயத்தை இதே நாளில் திருத்தந்தை 7வது அர்பன் புனிதப்படுத்தினார்.
திருத்தந்தை புனித அனாக்கீற்றஸ் புனித பவுலின் நினைவாக வேறொரு பேராலயம் எழுப்பினார். ஓஸ்டியா நகர் நோக்கிச் செல்லும் சாலையில் இது அமைந்துள்ளது. 395ல் கட்டப்பட்ட இப்பேராலயம் 400 அடி நீளமானது. இதற்குத் தியடோசியன் பேராலயம் என்னும் பெயர் சூட்டப்பட்டது. 1823ல் பெரிதோர் நெருப்பு இவ்வாலயத் தைச் சேதப்படுத்தவே, இதற்கு முன்பு இருந்த கம்பீரத் தோற்றத்தைக் காட்டிலும் புதுப்பிக்கப் பெற்ற பேராலயம் அதிகக் கம்பீரமாக இந்நாள் வரை காட்சியளிக்கிறது. 1854ல் மரியாவின் அமலஉற்பவம் பிரகடனப்படுத்தப் பெற்ற நாள்கள் கழித்து இவ்வாலயம் திருத்தந்தை 9ம் பத்திநாதரால் அர்ச்சிப்புப் பெற்றது.