புனித ஜோசப் பிக்னிடெல்லி, சே.ச

புனித ஜோசப் பிக்னிடெல்லி, சே.ச

குரு – (1737 – 1811)

ரஸ்யாவை ஆண்டு வந்த அரசி கத்தரீன் மட்டும் யேசு சபையினருக்கு அடைக்கலம் தந்திராவிடில், யேசு சபைக்கு எல்லா இடங்களிலும் எதிர்ப்பு மேலிட்டதனால், திருத்தந்தையின் ஆணைப்படி, எல்லா நாடுகளிலும் யேசு சபை தடை செய்யப்பட்டிருக்கும். அப்படி ஒருநிலை ஏற்படாதபடி அன்று யேசு சபைக்கென்று ஒரு மிகப்பெரிய தேவ பராமரிப்பு இருந்தமையால், நசுக்கப்பட்ட யேசு சபைக்கு மீட்புக் கிடைத்தது. ஒடுக்கப்பட்ட யேசு சபைக்கு விடுதலை கிடைத்தது.

திருத்தந்தை கையெழுத்திட்ட பிறகு யேசு சபையின் பெயரால் எந்த நாட்டிலும் துறவிகள் இருந்திருக்க முடியாது. ஆனால் தெய்வச் செயலாக ரஸ்யாவில் மட்டும், சபை மூடப்பட்டதற்கான திருத்தந்தையின் அறிவிப்புக்கு, சூழ்நிலை காரணமாக இடமில்லாது போயிற்று. ஆதனால் அங்கு புகலிடம் பெற்ற யேசுசபை யினர் பிக்னடெல்லியின் தலைமையில் தங்கள் பணியைச் செய்து வந்தனர். இந்நிலை ஜம்பது ஆண்டுகள் நீடித்தது.

1737ல் ஸ்பெயினில் சரகோசா நகரில் பிரபு குடும்பத்தில் பிறந்தவர். குருப்பட்டத்திற்குப்பின், தனது ஊரிலேயே பரம ஏழைகள் மத்தியில் பணியாற்றினார். யேசுசபை ஒழிக்கப்பட்டபோது இவருடன் ஸ்பெயினிலிருந்து மட்டும் 5000 யேசு சபையினர் நாடு கடத்தப்பட்டனர். போர்த்துக்கல்லில் ஒழித்துக்கட்டப்பட்டது. பிரான்ஸ், பெல்ஜியம், இத்தாலி முதலிய நாடுகளில் ஓட, ஓட விரட்டப்பட்டனர். எத்தனையோ இடங்களில் மிக இல்லலுற்று கடற்பயணம் செய்து, கரையை அடைந்தா லும், கரைக்கு வர அனுமதிக்கப்படவில்லை. இந்த சூழ்நிலையில் தான் முதலில் கோர்சிகாவிலும், பிறகு பெர்ராராவிலும், பின்னர் ரஸ்யாவிலும் நாள்களைக் கழித்தனர். அப்போது பிக்னடெல்லி தினமும் அவர்களுக்கு இருந்த சிறப்பான தேவ பராமரிப்பை எடுத்தக்கூறி வந்தார். யேசுசபை ஒழிக்கப்பட்டபோது அதன் அங்கத்தினர்கள் 23,000 பேராக இருந்தனர். இறுதியாக ரஸ்யாவிலிருந்தே யேசுசபையுடன் தொர்புகொண்டு பார்மாவில் ஒரு யேசுசபை மறை மாநிலம் உருவானது. இவர்தான் நவசந்நியாசிகளைக் கவனிக்கும் பொறுப்பையும் ஏற்றிருந்தார். நாளடைவில் இத்தாலியன் மறைமாநிலத் தலைவர் பொறுப்பை ஏற்றார். அவருக்கு 73 வயதாகும்போது1811ல் இறை வனடி சேர்ந்தார். இவர் இறந்து 3 ஆண்டுகளுக்குப்பின் 7ம் பத்திநாதர் திருச்சபை முழுவதிலும் யேசுசபைக்கு மீண்டும் உயிர் கொடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *