மடுமாதா திருத்தலத்தில் மாலைப்புகழ் ஆராதனை

(01.07.2019) திங்கட்கிழமை மடுமாதா திருத்தலத்தில் திருவிழரவை முன்னிட்டு மாலைப்புகழ் ஆராதனை நடைபெற்றது. இத் தூய நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை, கெழும்பு உயர் மறைமாவட்டத் துணை ஆயர் பேரருட்கலாநிதி மேவின் அன்ரனி ஜெயக்கொடி ஆண்டகை ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். மேலும் அறிய மடுமாதா திருத்தலத்தில் மாலைப்புகழ் ஆராதனை

புதிய தூயகப்பகுதி க்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

வீடமைப்பு, கட்டுமானப்பணி, கலாச்சார அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள மடுமாதா திருத்தலத்தின் மருதமடுத் திருத்தாயார் எழுந்தருளியிருக்கும் தூயகப் பகுதியை விசாலமாக்கும் பணித்திட்டத்தின் கீழ் புதிய தூயகப்பகுதி க்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு  (01.07.2019) காலை இடம் பெற்றது. இந் நிகழ்விற்கு வீடமைப்பு, கட்டுமானப்பணி, கலாச்சார அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்கள் வருகை தந்து பணிக்கான நினைவுப் படிகத்தை திரை நீக்கம் செய்து அடிக்கல்லினையும் நாட்டி வைத்தார். மேலும் அறிய புதிய தூயகப்பகுதி க்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு