புதிய தூயகப்பகுதி க்கான ஆரம்பப் பணிகளை முன்னெடுக்கும் நோக்குடன்

மடுமாதா திருத்தலத்தின் மருதமடுத் திருத்தாயார் எழுந்தருளியிருக்கும் தூயகப் பகுதியை விசாலமாக்கும் பணித்திட்டத்தின் கீழ் வீடமைப்பு, கட்டுமானப்பணி, கலாச்சார அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள புதிய தூயகப்பகுதி க்கான ஆரம்பப் பணிகளை முன்னெடுக்கும் நோக்குடன் ஆலோசனைக் கூட்டமொன்று 25.06.2019 புதன்கிழமை மடுத்திருத்தலத்தில் நடைபெற்றது.

மடுமாதா திருத்தலத்தின் மருதமடுத் திருத்தாயார் எழுந்தருளியிருக்கும் தூயகப் பகுதியை விசாலமாக்கும் பணித்திட்டத்தின் கீழ் வீடமைப்பு, கட்டுமானப்பணி, கலாச்சார அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள புதிய தூயகப்பகுதி க்கான ஆரம்பப் பணிகளை முன்னெடுக்கும் நோக்குடன் ஆலோசனைக் கூட்டமொன்று 25.06.2019 புதன்கிழமை மடுத்திருத்தலத்தில் நடைபெற்றது.

மன்னார் ஆயரின் பிரசன்னத்தில் கலாச்சார அமைச்சின் செயலர் உயர்திரு பேணாட் தலைமையில் இடம் பெற்ற இக்கலந்துரையாடலில் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி.அ.விக்ரர் சோசை, மடுத்திருத்தலப் பரிபாலகர் அருட்பணி.ச.ஜொ.பெப்பி சோசை, கலாச்சார அமைச்சின் பணித்திட்ட இயக்குனர் திருமதி.தாரனி அனோஜா கமகே, அரசின் அபிவிருத்தி, கட்டுமானம், ஒத்துழைப்பு ஆகியவற்றிற்கான முதல்வர் பொறியியலாளர் திரு. ஜெகநாதன் மற்றும் பல உயர் நிலை பணியார்களும் கலந்த கொண்டனர்.

இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 01.07.2019 காலை இடம் பெறும். இந் நிகழ்விற்கு வீடமைப்பு, கட்டுமானப்பணி, கலாச்சார அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்கள் வருகை தரவுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *