38வது ஆண்டு நிறைவு விழா

மன்னார் மறைமாவட்டம் உதயமாகி 38வது ஆண்டு நிறைவு விழா மன்னார் தோட்டவெளி மறைசாட்சியர்களின் தூய அரசி திருத்தலத்தில் இன்று 26.01.2019 காலை 07.15 மணிக்கு ஆரம்பமாகியது. இன்றைய திருவிழாவுக்கு திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி நோயல் இம்மானுவேல் ஆண்டகை அவர்கள் வருகை தந்து சிறப்புத் திருப்பலி ஒப்புக் கொடுத்துச் செபித்தார். மேலும் அறிய 38வது ஆண்டு நிறைவு விழா

தூய செபஸ்தியார் திருவுருவப் பவனி

மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத் திருவிழா 20.01.2019 ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில் அன்று மாலை தூய செபஸ்தியார் திருவுருவப் பவனி அலங்கரிக்கப்பட்ட தேரில் மன்னார் நகரத்தின் பல வீதிகளுடாக எடுத்துவரப்பட்டது. பெருந்திரளான மக்கள் இப்பவனியில் பங்கேற்றனர். பவனி முடிவில் பேராலயத்தில் தூய செபஸ்தியாரின் திருவுருவ ஆசீர் வழங்கப்பட்டது. மேலும் அறிய தூய செபஸ்தியார் திருவுருவப் பவனி

மன்னார் தூய செபஸ்தியார் பேராலய திருவிழா

திருச்சபையின் திருவழிபாட்டு ஒழுங்கின்படி வருடந்தோறும் தை மாதம் 20ம் திகதி உலகமெங்கும் தூய செபஸ்தியாரின் விழா கொண்டாடப்படுகின்றது. மன்னார் மறைமாவட்டத்தின் தலைமை ஆலயமாக இருக்கும் மன்னார் தூய செபஸ்தியார் பேராலயல மக்களும் தமது பாதுகாவலராம் தூய செபஸ்தியாரின் திருவிழாவை நேற்று 20.01.2019 ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்பாகக் கொண்டாடினர். மேலும் அறிய மன்னார் தூய செபஸ்தியார் பேராலய திருவிழா

மாலைப்புகழ் வழிபாடு ( வேஸ்பர் ) நடைபெற்றது.

மன்னார் தூய செபஸ்தியார் பேராலயப் பாதுகாவலரின் திருவிழா கடந்த 11/01/2019 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தினமும் ஆயத்த வழிபாடுகள் நடைபெற்று இன்று (19/01/2019 ) மாலை மன்னார் மறைமாவட்டம் குருமுதல்வர் அருட்பணி அ.விக்ரர் சோசை அடிகள் தலைமையில் மாலைப்புகழ் வழிபாடு ( வேஸ்பர் ) நடைபெற்றது.  மேலும் அறிய மாலைப்புகழ் வழிபாடு ( வேஸ்பர் ) நடைபெற்றது.

தூய செபஸ்தியார் வருடாந்தத் திருவிழா மாலைப் புகழ் திருவழிபாடு

மன்னார் பேராலயப் பாதுகாவலர் தூய செபஸ்தியார் வருடாந்தத் திருவிழா மாலைப் புகழ் திருவழிபாடு / தூய செபஸ்தியார் பேராலயம், மன்னார். Vesper Service at St. Sebastian’s Cathedral,Mannar. 19/01/2019

புதுவருட நள்ளிரவுத் திருப்பலி

2019ம் ஆண்டு புதுவருட நள்ளிரவுத் திருப்பலி மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் பல அருட்பணியாளர்களோடு இணைந்து ஒப்புக்கொடுக்கப்பட்டது. மேலும் அறிய புதுவருட நள்ளிரவுத் திருப்பலி

புதிய வருடம் புதிய வருடம்

புதிய வருடம் ( 2019ம் ஆண்டு – இறைவனின் அன்னை தூய கன்னி மரியா பெருவிழா ) நள்ளிரவுத் திருப்பலி. தூய செபஸ்தியார் பேராலயம் மன்னார்.