மே:25
புனித ஏழாம் கிரகோரியார்
பாப்பு – (கி.பி.1028-1085)
கில்டர்பிராண்ட் என்பது இவருக்கு பெற்றோரால் இட்டபெயர். இவர் டஸ்கனி நாட்டில் பிறந்தவர். உரோமையில் தன் படிப்புக்களை முடித்தபின் புனித ஆசீர்வாதப்பர் சபைத் துறவியானார். இவர் 5 பாப்பரசர்களுக்கு ஆலோசகர்களாக இருந்தார். பின்னர் இவரே பாப்புவின் நிலைக்கு உயர்த்தப் பெற்ற 7ம் கிரகோரியார் என்ற பெயரை தேர்ந்து கொண்டார். இவரது நாள்களில்தான் கிரகோரியாரின் சீர்திருத்தம் என்ற மாபெரும் சீர்திருத்தம் திருச்சபைக்கு கிடைத்தது. இதன்மூலம் திருச்சபை பாப்பரசர்களை தெரிந்து கொள்வதில் அரசர்களின் குறுக்கீட்டை முழுமையாக நீக்கிக் கொண்டு பொலிவுடன் திகழ்ந்தது. குருக்கள், திருமணத்தில் ஈடுபடுவது புனித பொருட்களும் புனித பதவிகளும் விற்க்கப்படுவது ஆகிய முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளியிட்டார். இதன் காரணமாக அரசரான 4ம் என்றி இவரைக் கடுமையாக எதிர்க்க நேர்ந்தது. இதனால் இவர் சலர்னோவுக்கு ஓடி விட்டார். அங்கே கி.பி. 1085ம் ஆண்டு புனிதராக இறந்தார்.