புனித ஜோசப்பாத்

புனித ஜோசப்பாத்

ஆயர், மறைசாட்சி – (கி.பி. 1580 – 1623)

கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவர்களையே அழித்துக்கொள் ளும் கொடுமையைக் கேட்டிருக்கிறீர்களா? மூளை சிதற அடித்து இந்தப் புனிதரைக் கொன்றவர்கள் கிறிஸ்தவர் கள்தாம்.

கி.பி 1967ல் திருத்தந்தை 6-ஆம் சின்னப்பர் கிழக்கித்திய திருச்சபையின் பிதாப்பிதாவாகிய முதல் அத்தன கோரசைக் கட்டித் தழுவினார். ஒருவர் ஒருவருக்கு அமைதியின் முத்தம் அளித்தனர். பிரிவினை என்னும் வடு நீங்கிவிட்டதாக இது காட்டுகிறதென்று உலகிற்கு அறிவித்தனர். பிரிவினை இன்று நீங்கிவிட்டது.

ஜோசபாத், உக்ரெய்ன் நாட்டின் பிறந்தவர். பாசில் சபையில் சேர்ந்து பிறகு குருவானார். விரைவில் இவர் சிறந்த மறைபோதகர் என்ற புகழ் பெற்றார். தொடக்கத் திலேயே இவர் ஒரு பெரிய சிக்கலைச் சமாளித்தார். பிரிவினைச் சபையாருடன் நெருங்கிய நட்பு கொண்டி ருந்தார்.

அவர்களில் சிலர் இதனால் இவரை ஜயுற்றனர். “திருவழி பாட்டு முறைகளிலும் மற்ற சட்டதிட்டங்களிலும் இவர் ஓடுருவுகிறார். நாளடைவில் உரோமன் கத்தோலிக்கரு டன் நம்மை ஒன்றாக்கி விடுவார்” என்று அஞ்சினர். உண்மையில் இவர் தமது திறமையினால் பிரிவினை சபைச் சகோதரர் பலரையும் ஒரே மந்தையில் கொண்டு வந்து சேர்த்தார். ஆனால் “ஸ்லாவோனிக்” என்று அழைக் கப்படும் அவர்களின் வழிபாட்டு முறைகளைப் பெரிதும் பாராட்டினார்: ஆதரித்தார். ஆனால் அதனை அழிக்க முயன்றார் என்பது இவருடைய பகைவர்களின் பெரியதொரு குற்றச்சாட்டு.

விரைவில் பிரிவினை  சபையின் ஆட்சிப் பீடத்தில் பெரியதொரு மாற்றம் ஏற்பட்டது. “இவர் இலத்தீன் கிறிஸ்தவர்களாக மாற்ற முயலுகிறார்” என்று இவர் மீது குற்றஞ்சாட்டினர். அப்போதிருந்தபோலந்து நாட்டு ஆயர் கள் இவருக்குப் போதிய ஆதரவு அளிக்கவில்லை. தமது மறைமாநிலமாகிய போலோக்குக்குப் போகக் கூடாது என்று இவரைத் தடுத்தனர். ஆனால் இவர் துணிச்சலுடன் சென்றார். ஒரு பிரிவினை சபைக் குருஇவரை இழிவாகத் திட்டியபடியே இவரை அப்புறப்படுத்தினார். இதற்குள் பிரிவினைச் சபையார் ஒன்றுகூடி ஆயரின் இல்லத்தி னுள் புகுந்தனர். மூளை சிதறுமாறு அடித்து இவரின் தலையைப் பிளந்தனர். இறுதியில் சுட்டனர். இவரது உடலை ஆற்றில் எறிந்தனர். கிழக்கத்திய திருச்சபையின் முதல் புனிதர் இவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *