புனித யோசவ்வாஸ் ஆண்டை முன்னிட்டு கலையருவி முன்னெ டுக்கும் நிகழ்வுகள்.
இலங்கையில் இவ்வாண்டு கத் தோலிக்க திருச்சபையால் புனித யோசவ்வாஸ் ஆண்டு பிரகனப்படுத்தப் பட் டுள்ளது. இவ் வாண்டுக்குரிய பல்வேறுசெயல் திட்டங்கள் மன்னார் மறைமாவட்டத் திலும் சிறப்பாக முன்னெடுக் கப்பட்டு வருகின்றன. மன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்பு அருட்பணி மையம் ‘கலையருவி’ புனித யோசப்வாஸ் ஆண்டை முன்னிட்டு மன்னார் மறைமாவட்டத்தில் பல்வேறு போட்டி நிகழ்வு களை நடாத்தியது.
இப்போட்டிகள் அனைத்தையும் மன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்பு அருட்பண மையம் ‘கலையருவி’ இயக்குனர் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் திட்டமிட்டு ஒழுங்கமைத்து நடாத்தி வருகின்றார்.
கட்டுரை, கவிதை, சித்திரம், பேச்சு, தனிப்பாடல், குழுப் பாடல், தனி நடனம், குழு நடனம், நாடகம், பாடல் இறு வட்டுத் தயரிப்பு என பல போட்டிகள் நடாத்தப்பட்டன. மன்னார் மறைமாவட்டத்தின் பல்வேறு பங்குகளைச் சேர்ந்த மாணவர் மாணவியர் இப்போட்டிகளில் உற்சாக மாகப் பங்கெடுத்தனர். இப்போட்டிகளில் வெற்றிபெற் றோர் பற்றிய விபரங்கள் மன்னார் மறைமாவட்ட மாதாந்தப் பத்திரிகையாகிய ‘மன்னா’ பத்திரிகையில் தொடர்ச்சியாகப் பிரசுரிக்கப்பட்டு வருகின்றன.
மாணவர் மற்றும் வளர்ந்தோர் மத்தியில் புனித யோசப் வாஸ் அடிகளாரைப்பற்றிய அறிவை, விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அவர்களின் ஆற்றல் திறமைகளை வெளிக்கொண்டுவருவதும் இப்போட்டிகளின் நோக்க மாகும். இப்போட்டிகளில் தனி நடனம், குழு நடனம் மற்றும் நாடகப் போட்டிகளின் படங்களை இங்கே காணலாம்.